திருச்சி தென்னூர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 7 வயது சிறுமிக்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வேலை பார்த்து வந்த தெப்பக்குளம் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கோமதீஸ்வரன் (வயது 64 ) என்ற காவலாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த சிறுமியின் தாய் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோமதீஸ்வரன் என்பவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
