Skip to content

திருச்சி மண்டலத்தில் சிறப்பாக பணியாற்றிய டிரைவர் கன்டக்டர்களுக்கு சால்வை அணிவிப்பு…

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் இன்று திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் போக்குவரத்து துறையில் சிறப்பாக பணியாற்றிய (செயல்திறன் மிக்க)14 ஓட்டுநர்கள் மற்றும்15 நடத்துனர்களுக்கு கும்பகோணம் கோட்டம் நிர்வாக இயக்குனர்  இரா. பொன்முடி  சால்வை அணிவித்து கௌரவித்தார்கள். தொடர்ந்து கௌரவிக்கப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுடன் கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் இரா.பொன்முடி மதிய உணவு அருந்தினார்கள். அருகில் முதன்மை தணிக்கை அலுவலர் (கூட்டாண்மை ) . சிவகுமார், பொது மேலாளர்  ஆ.முத்து கிருஷ்ணன், துணை மேலாளர் ( கூட்டாண்மை வணிகம்)  சுரேஸ், துணை மேலாளர்(வணிகம்) திரு.புகழேந்திராஜ், உதவி மேலாளர் (தொழில்நுட்பம்) .ராஜேந்திரன் , மற்றும் நடத்துனர்கள் ,ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!