Skip to content

திமுக எம்.பி. வழக்கு……சிறப்பு கோர்ட்டில் நாளை எடப்பாடி ஆஜர்

மக்களவை தேர்தல் பிரசாரத்தில் மத்திய சென்னை தொகுதியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக பயன்படுத்தவில்லை என கூறினார். இந்த குற்றச்சாட்டை மறுத்த தயாநிதி மாறன், இது தொடர்பாக  எடப்பாடி மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நாளை எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு கோர்ட்டில் நடக்கிறது. அப்போது எடப்பாடி பழனிசாமி கோர்ட்டில் நேரில் ஆஜராகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!