Skip to content

கரூர் அருகே திடீரென எரிந்த கார்…அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 5 பேர்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சித்தலவாயை சேர்ந்தவர் டிரைவர் திருப்பதி. இவர் வாடகை கார் ஓட்டி வருகிறார். இன்று தனது மாருதி சுசுகி ஈகோ காரில் மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த 5 பேர் தொட்டியத்தில் உள்ள தனது உறவினரின் இல்ல சுப நிகழ்ச்சிக்கு பொருட்கள் வாங்குவதற்காக இன்று குளித்தலைக்கு வாடகை காரில் வந்துள்ளனர். பொருட்கள் வாங்கிக் கொண்டு தொட்டியம் செல்வதற்காக திருச்சி கரூர் சர்வீஸ் சாலையில் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே சென்றபோது திடீரென காரில் இருந்து புகை கிளம்பி உள்ளது. உடனே சுதாரித்துக் கொண்டவர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு காரில் இருந்தவர்களையும் கீழே இறக்கி விட்டுள்ளார். அவர்கள் கீழே இறங்கியதும் கார் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. தீ மள மள வென பரவி கார் கொழுந்துவிட்டு எரிந்தது. அப்போது அருகில் இருந்தவர்கள் தண்ணீரை பீச்சி அடித்து சுமார் 20 நிமிடங்களாக போராடி தீயை அணைத்தனர். கார் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்து காரில் வந்த நான்கு பெண்கள் உட்பட ஆறு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் திருச்சி கரூர் சர்வீஸ் சாலையில்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
error: Content is protected !!