நடந்த சட்டமன்ற கூட்டத்தில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நிதித்துறை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 29 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் நிதித்துறை தொடர்பான 4 மசோதாக்க உட்பட 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மேலும் 4 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அண்மையில் நடைபெற்ற கூட்டத்தொடரில் 18 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் கொடுத்துள்ள நிலையில், 14 மசோதாக்கள் நிலுவையில் உள்ளது