Skip to content

சிறுவர்கள் காவடி எடுத்து உற்சாக பக்தி ஆட்டம்… மெய்சிலிர்ந்த பக்தர்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் மாமாகுடியில்  கோமளாம்பிகை என்னும் தோப்பிடையாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் ஒட்டி பச்சைக்காளி, பவளக்காளி  ஆட்டம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு  நடந்தது. இதனை யொட்டி நான்கு கால அபிஷேக ஆராதனையும் கரகம் புறப்பாடும் நடந்தது. அப்போது பச்சைக்காளி, பவளக்காளி  காளி வேடம் அணிந்து காளியாட்டம், பால் காவடி, அலகு காவடி, பறவைக் காவடி உள்ளிட்ட காவெடிகளுடன் அக்கரகார குளக்கரையில் இருந்து கோவிலை சுற்றி உள்ள  வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அதனைத் தொடர்ந்து  கோமளாம்பிகை என்னும் தோப்பிடையாள் அம்மனுக்கு பால், தேன், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடந்தது.இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் கிராம மக்கள் செய்து இருந்தனர். இதில் சிறுவர்கள் காவடி எடுத்து வந்து உற்சாக பக்தி ஆட்டத்துடன் வந்தனர் மெய்சிலிர்ந்த பக்தர்கள் இதில் கோலாட்டம் நடைபெற்றது.
error: Content is protected !!