ஆந்திராவில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பெண்களை இடித்து தள்ளிய வீடியோ வெளிவந்துள்ளது. அனகாபள்ளி மாவட்டத்தில் NH 16-ல், சாலையோரம் சில பெண்கள் நடந்து சென்றுள்ளனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, அவர்களை பின்னால் இருந்து மோதி

நசுக்கியுள்ளது. இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயமடைந்துள்ளார். தப்பி சென்ற லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
