Skip to content

கன்னடத்தை இழிவுபடுத்தும்நோக்கத்தில் பேசவில்லை -கமல் விளக்கம்

நடிகர் கமலஹாசன்  மன்னிப்பு கேட்டால் தான்  கர்நாடகத்தில் தக்லைப்  வெளியிடப்படுமா,  பாதுகாப்பு அளிக்கப்படுமா  என்ற மனுவை விசாரிக்க முடியும் என கர்நாடக  ஐகோர்ட் நீதிபதி நாகபிரசன்னா கூறியதை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் , கா்நாடக  திரைப்பட சங்கத்தலைவருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.  அதில் கூறி இருப்பதாவது:

எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது. நாம் அனைவரும்  ஒன்று, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற  கருத்தை வெளிப்படுத்தவே  நான்,  அந்த கருத்தை சொன்னேன். சினிமா  மக்களை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும். பிரிக்க கூடாது.  கன்னட மொழியையோ, கன்னட மக்களையோ இழிவுபடுத்தும் நோக்கத்தில் நான் பேசவில்லை். கன்னட மக்களின் மொழிப்பற்றை நான் மதிக்கிறேன்.  ஒரு மொழி இன்னொரு மொழி மீது ஆதிக்கம் செலுத்துவதை நான் எப்போதும் எதிர்த்து வந்திருக்கிறேன்.  இந்த தவறான புரிதல் தற்காலிகமானது தான் என நான் நம்புகிறேன்.

கன்னட மொழி தொன்மையானது . வளமானது என்பது விவாதத்திற்கு உரியதல்ல. எனவே பேச்சால் சிவராஜ்குமாருக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்திற்கு வருந்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

கர்நாடக ஐகோர்ட்  கமலுக்கு விதித்த நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிக்கைக்கு  சீமானம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

error: Content is protected !!