திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் சட்டவிரோதமாகப் போலி ஆவணங்கள் மூலம் சார்பதிவாளரால் கிரயம் செய்து பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், வழக்கின் தீவிரத்தன்மையை உணர்ந்து அதன் விசாரணையை சிபிசிஐடி (CB-CID) பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
பழனி கோயில் நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு.
ரூ.100 கோடி மதிப்பிலான பழனி கோயில் நிலம் பத்திரப்பதிவு செய்த வழக்கில் சார்பதிவாளர் ஏற்கெனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நில பத்திரப்பதிவு செல்லாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வும் தீர்ப்பு வழங்கி இருந்தது.
