பட்டுக்கோட்டை அருகே உள்ள சேண்டா கோட்டை மாளியக்காடு காசாங் காடு அக்கரை வயலில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ கதிராலம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சென்ற ஏழாம் தேதி மண்டகப்படி துவங்கி அதிலிருந்து தொடர்ந்து விழா நடைபெற்று வந்தது

இன்று காலை 8 மணிக்கு பத்து டன் எடை கொண்ட தூக்கு தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள்

தூக்கி சென்றனர். நான்கு திசை எல்லை வரை தூக்கி சென்று மாலை ஆறு மணி அளவில் திருக்கோவிலை அடைந்தது விழாவை காண்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
