ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினர். ஆனால் அதற்கு மத்திய அரசு மறுத்து விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகார மந்திரி கிரென் ரிஜிஜு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் கூடும் தேதியை அறிவித்து விட்டதன் மூலம், நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும் என்ற கோரிக்கை எழாது என மத்திய அரசு கருதுகிறது.
