பழனி முருகன் கோயிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம் செய்தார். சூர்யா 46 படக்குழுவினருடன் கால பூஜையில் கலந்துகொண்டு முருகனை வழிபட்டார்.
பழனி முருகன் கோயிலில் திரைப்பட நடிகர் சூர்யா சாமி தரிசனம் செய்தார். மலை அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலை கோயிலுக்கு சென்ற சூர்யாவை கோயில் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் காலை 8 மணிக்கு நடைபெறும் சிறுகால சந்தி பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். சூர்யா நடிக்க உள்ள 46வது படத்தின் திரைப்படத்தின் கதையை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.
பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் சூர்யாவுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் கோயிலை வலம் வந்த சூர்யா சித்தர் போகர் சன்னதியில் வழிபட்டார். நடிகர் சூர்யா கோயிலுக்கு வந்ததை அறிந்த பக்தர்கள் ஆர்வமுடன் சூர்யாவை காண குவியத்தொடங்கினர். பின்னர் ரசிகர்கள் பலரும் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சூர்யா வருகையொட்டி, அவரது ரசிகர்கள் திரண்டதால் கோயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகிவரும் தனது 46வது படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக படக்குழுவினர், படத்தின் கதையை வைத்து பூஜைசெய்துள்ளனர். இந்தப்படத்தில் சூர்யாவுடன் ராதிகா, சரத்குமார், ரவீனா டான்டன் , மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

