மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முழு சுகாதார தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முழு சுகாதார தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தொடங்கி வைத்து, பார்வையிட்டு, மரக்கன்று நட்டு வைத்தார் இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
பூமியையும் அதன் இயற்கை சூழலையும் பாதுகாக்க முடிந்தவரை ஒத்துழைப்பு தர வேண்டும்;. வளங்களை வீணாக்குவதை குறைக்கும் பழக்கங்களை நான் கடைபிடிக்க வேண்டும்;. ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பொருட்களை பயன்படுத்த கூடாது. ஏற்கனவே பயன்படுத்திய நெகிழி பொருட்களை மரு பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்;. நெகிழி பைகளுக்கு பதிலாக காகித பைகள் மற்றும் துணி பைகளையே பயன்படுத்த வேண்டும்;.
சுற்றுச்சூழலின் தூய்மை மாசு அடைய ஒரு போதும் துணை நிற்க கூடாது. நம்மால் முடிந்தவரை குறைந்த கழிவுகளை உருவாக்க வேண்டும்;. நம்மால் முடிந்தவரை பல மரங்களை நட வேண்டும்;. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுப்புற சுகாதார சீர்கேடு மற்றும் மாசு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; என தெரிவித்தார்.
தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் .ஸ்ரீகாந்த் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில், அரசு அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.