தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மகிழங்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அய்யனார் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு மூன்று கால பூஜை நடைபெற்று மகா தீபா ஆராதனை நடைபெற்றது பின்னர் கடம் புறப்பாடு நடைபெற்றது பின்னர் அஷ்டபந்தனை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிசேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
