அரியலூர் மாவட்டம், வானதிராயன்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்.(40). இவர் இவர் தனது சொந்த வேலையின் காரணமாக அரியலூர் வந்துவிட்டு இன்று மாலை தனது கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சூரிய மணல் கிராமத்திற்கு சென்ற பொழுது திடீரென குறுக்கே வந்த குட்டி நாய் ஒன்றின் மீது முருகனின் இருசக்கர வாகனம் மோதியது. வாகனத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்த முருகன், கை, கால், தோள்பட்டை மற்றும் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டது. இதனை பொருட்படுத்தாத முருகன் உடனடியாக அடிபட்ட நாயை தூக்கி வைத்துக்கொண்டு, அதற்கு முதலுதவி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அருகில் இருந்த கடையில் தண்ணீர் வாங்கி நாய் குட்டிகள் வாயில் ஊற்றி உயிரூட்டும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் நாய் குட்டி உயிரிழந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். நாய்க்குட்டியை தனது இருக்கைகளிலும் ஏத்தி அதற்கு முத்தமிட்டு உருகி அழ ஆரம்பித்தார். அருகில் இருந்தவர்கள் ஆறுதல் கூறியும் நாய்க்குட்டியை கைகளில் ஏந்தி அழுது கொண்டிருந்தார். பின்னர் அருகில் கட்டிட வேலை பார்த்து கொண்டிருந்தவர்களிடம் மண்வெட்டி வாங்கிக்கொண்டு சாலையில் ஓரத்தில் பள்ளம் தோன்றி அதில் உயிரிழந்த நாயை அடக்கம் செய்தார். உயிரிழந்த நாய்க்குட்டிக்காக தொடர்ந்து அழுது கொண்டே இந்த காரியங்களை முருகன் செய்த போது அருகில் சுற்றி நின்றவர்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
தனது உடல் காயத்தை பொருட்படுத்தவில்லை தனது விலை உயர்ந்த செல்போனை பொருட்படுத்தவில்லை தன்னால் விபத்து ஏற்பட்டு உயிரிழந்த நாய் குட்டிக்காக துடிதுடித்த ஆன்மாவை கண்டு அவர்களும் வியந்து போனார்கள். அருகில் இருந்த ஒருவர் முருகனுக்கு ஆறுதல் கூறி நாய்க்குட்டி தானே விடுங்கள் என்று கூறிய போது, அதுவும் ஒரு உயிர் தானே என்று கூறியதுடன், நாய்க்கு பதிலாக ஒரு மனிதன் மீது நான் மோதி இருந்தால் சுற்றி இருப்பவர்கள் என்னை என்ன செய்திருப்பார்கள்?, மனிதனை விட விலங்குகளின் மீது தான் அன்பு அதிகம் செலுத்த வேண்டும் என்று கூறினார். முருகனின் பேச்சும் அவரது நடவடிக்கைகளும் அவர் எவ்வளவு அன்பானவர் என்றும், குணா படத்தில் கமல் பேசும் வசனம் மனிதன் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது இன்று காதலுக்கு சொன்ன தத்துவத்தை விட முருகனின் அன்பு பெருந்தோங்கி நின்றது. அன்பே சிவம் என்ற வார்த்தைகள் தான் இச்செயல்பாடுகளின் மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டாக இச்சம்பவம் விளக்குகின்றது.