திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை ஒரு லட்சம் மதிப்பிலான 61 கிலோ குட்கா பறிமுதல்!4 பேர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையம், கோட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளில் குட்கா விற்பனையில் ஈடுபடுவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா ஸ்ரேயா குப்தாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு தடைந்து சென்ற எஸ்பி தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் ரவி டீக்கடையில் தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர் கடையில் இருந்த 37 கிலோ குட்காவை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளரான ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பியான ரவிக்குமார் (57) ரமேஷ் (53) இருவரையும் கைது செய்தனர்.
அதேபோல கோட்டை தெரு பகுதியை சேர்ந்த அபி ரகுமான் மகன் நபிசூர் ரகுமான் பீடா கடையில் சோதனை மேற்கொண்டபோது 24 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்
பீடா கடைக்கு குட்கா சப்ளை செய்த LIC பகுதியைச் சேர்ந்த நவாப் மதன் சாதிக் (48) மற்றும் பீடா கடை உரிமையாளர் நபிசூர் ரகுமானையும் கைது செய்தனர். மேலும் தனிப்படை போலீசார் 4நபர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்த சுமார் 1 லட்ச ரூபாய் மதிப்பிலான 61 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.