Skip to content

15ம் தேதி கல்லணையை திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று  டெல்டா பாசனத்திற்காக  மேட்டூர் அணையை திறந்து வைத்தார்.  இந்த தண்ணீர் 15ம்தேதி  கல்லணை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே வரும்1 5ம் தேதி  தஞ்சை வரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  திருச்சியில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் கல்லணையை திறந்து வைக்க இருக்கிறார்.  இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம்  114.89 அடி. அணைக்கு வினாடிக்கு 6,896 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்கு 6,919 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் 85.553 டிஎம்சி தண்ணீர் உள்ளது.

 

 

error: Content is protected !!