Skip to content

இஸ்ரேல் தாக்குதல்-ஈரான் தளபதி பலி

  • by Authour
இஸ்ரேல்,  ஈரான் இடையே உச்சகட்ட போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று  இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது “ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஆட்சியின் உயர் ராணுவத் தளபதியுமான அலி ஷத்மானி, துல்லியமான உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து, மத்திய டெக்ரானில் ஐஏஎப் தாக்குதலில் கொல்லப்பட்டார்” என்று ஐடிஎப் ட்வீட் செய்தது.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) ஈரானில் இருந்து ஏவப்பட்ட புதிய ஏவுகணைகளைக் கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது.
 
error: Content is protected !!