Skip to content

குளித்தலை அருகே மதுபோதையில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு… தீவிர சிகிச்சை…

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிவாயம் ஊராட்சி வேளாங் காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோடாங்கி ( ஆடு மாடு தரகர் தொழிலாளி) வயது 53. கீழ கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாடு தரகர் பெரியசாமி, வயது 50 ஆணை கவுண்டனூர் சேர்ந்த பழனிச்சாமி மாடு தரகர், ஆகிய மூன்று நபர்களும் இரண்டு இரு சக்கர வாகனத்தில் அதிகாலை 4.00 மணி அளவில் அய்யர்மலை டீக்கடையில் டீ குடிக்க வந்தனர்.

அப்போது அய்யர்மலை சிவாயம் நெடுஞ்சாலையில் ஆணை கவுண்டனூர் பேருந்து நிறுத்தத்தில் கோடாங்கி என்பவருக்கு மயக்கம் வருவது போல் இருந்ததால் இருசக்கர வாகனத்தை நிறுத்தி பேருந்து நிலையத்தில் மூன்று நபர்களும் அமர்ந்திருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இரண்டு வாலிபர்கள் மது போதையில் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்த மூன்று நபர்களை சகல வார்த்தைகளால் பேசி தன் கையில் வைத்திருந்த அருவாளால் வெட்டிய போது கோடாங்கி என்பவருக்கு இரண்டு கைகளிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. தப்பி ஓடிய பெரியசாமி என்பவரை இடுப்பில் அரிவாளால் வெட்டினர்.

மூவரும் உயிருக்கு பயந்து கொண்டு குடியிருப்பு பகுதிகளில் ஓடி மறைந்து கொண்டனர். மது போதையில் வந்த இரண்டு வாலிபர்கள் இரண்டு இரு சக்கர வாகனங்களை அடித்து சேதம் செய்தனர். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் குளித்தலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில்

குளித்தலை காவல் உதவி ஆய்வாளர் சரவண கிரி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அருவாள் வெட்டு காயங்களுடன் மறைந்திருந்த கோடாங்கி என்பவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

உயிருக்கு பயந்து விவசாய நிலத்தின் வழியாக ஓடிய பெரியசாமி என்பவர் தனது வீட்டில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

கோடாங்கி என்பவருக்கு இரண்டு கைகளிலும் அரிவாள் வெட்டு காயம், பெரியசாமி என்பவருக்கு வயிற்றின் அல்லை பகுதியில் கடுமையான வெட்டு காயம் ஏற்பட்டது. இதில் வயிற்றில் வெட்டு காய ஏற்பட்ட பெரியசாமி திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டார். மற்றொரு மாட்டு தரகர் பழனிசாமி உயிருக்கு பயந்து கொண்டு வீட்டுக்கு சென்று விட்டார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து மது போதையில் அரிவாளால் வெட்டிய இரண்டு வாலிபர்களை குறித்து விசாரணை செய்து வருகின்றனர். அதிகாலையில் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ஆடு மாடு தரகர்களை மது போதையில் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது.

error: Content is protected !!