கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள பொன்னபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி இவர் தனியார் பள்ளி வேன் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி தேவி இவர்களது மகன் சரவணன் (26) இவர் தனியார் கோழிப்பண்ணை நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
(26) வது பிறந்தநாள் என்பதால் வீட்டில் பொள்ளாச்சியில் நண்பர்களை பார்த்து விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது கோவை சாலை சேரன் நகர் பகுதியில் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்பு சுவர்மீது மோதி தூக்கிவீசப்பட்டு எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சரவணன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த மோதிராபுரத்தைச் சேர்ந்த ரியாஸ் அகமது என்பவர் படுகாயம் அடைந்தார் . பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து அங்கு விரைந்த மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் இறந்த சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த ரியாஸ் அகமது கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிறந்தநாள் என்பதால் புத்தாடை அணிந்து வெளியில் சென்று விட்டு சரவணன் வீட்டுக்கு திரும்பிச் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
