தஞ்சாவூரில் மத்திய அரசின் தென்னகப் பண்பாட்டு மையத்தில் றசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 1500 க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்
சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது, இதையடுத்து மத்திய அரசு கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தின் சார்பில் ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற அடிப்படையில் யோகா தினம்
நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ விருது பெற்ற தெருக்கூத்து கலைஞர் பி கே சம்பந்தன் கலந்து கொண்டு யோகா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார், இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 1500 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு புஜங்காசனம், சிரசாசனம், மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர், இந்நிகழ்ச்சியில் தென்னகப் பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்