அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் பெண் முருக பக்தர்கள் ஒன்று கூடி குத்துவிளக்கு பூஜை நடத்தினர். பூஜையில் கொரோனா என்னும் கொடிய நோய் உள்பட நோய்கள் வராமல் பொதுமக்கள் நோயுற்று இருக்கவும், மழை மாறி பெய்து விவசாயம் செழிக்கவும், உலக நன்மை வேண்டி குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் பீனிக்ஸ் பெண்கள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ் கலந்துகொண்டு குத்துவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார், இதில் ஜெயங்கொண்டம், செங்குந்தபுரம், சீனிவாசன் நகர்,
வேலாயுதநகர், சேவகர் தெரு, சன்னதி தெரு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பீனிக்ஸ் அறக்கட்டளை பெண்கள் ஒன்று கூடி குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். முடிவில் பிரார்த்தனையில் ஈடுபட்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதுரையில் 22 ஆம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றுவது என தீர்மானிக்கப்பட்டது.