திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் பொன்னேரி பழவேற்காடு சாலையில் பஜார் வீதியில் நடைபெற்றது. இதில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சாமு நாசர் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேசியதாவது: தமிழ்நாடு வளர்ச்சிக்கு ஆளுநர் மூலம் பாஜக அரசு முட்டுக்கட்டை போடுகிறது.
நானும் உயர்கல்வி செயலரும் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டும் இன்னும் ஒதுக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
இன்று தஞ்சை மாவட்டம் திருவையாறில் அமைச்சர் கோவி செழியன் அளித்த பேட்டியில், கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்க இடம் தயாராக இருக்கிறது. தற்காலிகமாக எங்கு செல்பட வேண்டும், நிரந்தரமாப எங்கு பல்கலைக்கழகத்தை அமைப்பது என இடம் தேர்வு செய்து விட்டோம். ஆனால் ஒப்புதல் கொடுக்க கவர்னர் காலம் தாழ்த்துகிறார் என்றார்.