Skip to content

நாளை, கரூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: VSB அழைப்பு

கரூர்மாவட்டதி.மு.க. செயற்குழுகூட்டம் நாளை(சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு கரூர் மாவட்டக்  திமுக  அலுவலகம் (கலைஞர் அறிவாலயம்) தளபதி அரங்கில்  நடக்கிறது. மாவட்டக் கழக அவைத் தலைவர் டி.ராஜேந்திரன் தலைமை தாங்குகிறார்.

திமுக  உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி, கழக நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன். கழக சட்டத்துறை இணைச் செயலாளர் என்.மணிராஜ், கழக நெசவாளர் அணி செயலாளர் பரணி கே.மணி, குளித்தலை இரா.மாணிக்கம் எம்.எல்.ஏ.. அரவக்குறிச்சி  பி.ஆர். இளங்கோ எம்.எல்.ஏ, கிருஷ்ணராயபுரம்  க.சிவகாமசுந்தரி எம்.எல்.ஏ..

திமுக  கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கரூர் முரளி,  சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணை செயலாளர் முனவர் ஜான்,  வர்த்தக அணி துணை செயலாளர் வே.பல்லவிராஜா, கழக தொழிலாளர்அணி துணைசெயலாளர் பி.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி ஓரணியில் தமிழ்நாடு புதிய கழக உறுப்பினர் சேர்க்கை மற்றும் திமுக  வளர்ச்சி பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

அதுசமயம் மாநில நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள். தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள். கழக பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் பொறுப்பாளர்கள், மாவட்ட அனைத்து அணி அமைப்பாளர்கள். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று  முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான வி. செந்தில்  பாலாஜி   விடுத்துள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

 

error: Content is protected !!