Skip to content

சிராஜின் கவனக்குறைவால் ஜடேஜாவின் போராட்டம் வீண், இந்தியா தோல்வி

  • by Authour

 இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி,  அங்கு 5 டெஸ்ட் தொடர்களில் ஆடுகிறது. ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்ற நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 3 வது  நடைபெற்று வந்தது.

இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களும், இந்தியா 387 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டத்தில் 62.1 ஓவர்களில் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 40. பென் ஸ்டோக்ஸ் 33, ஹாரி புரூக் 23 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து 193 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இந்​திய அணி 4-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 17.4 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 58 ரன்​கள் எடுத்​தது. யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 0, கருண் நாயர் 14, கேப்​டன் ஷுப்​மன் கில் 6, ஆகாஷ் தீப் 1 ரன்​களில் நடையை கட்​டினர். கே.எல்​.​ராகுல் 33 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார்.
4வது நாள் இந்திய அணி  2வது இன்னிங்சை தொடங்கியபோது  193 ரன்கள் தானே என்ற நிலையில், இந்தியா எளிதில் வெற்றி பெற்றுவிடும் என்ற  எண்ணம் ரசிர்களுக்கு மட்டுமல்ல,   இந்திய வீரர்களுக்கும் இருந்தது.  ஆனால்  அன்றைய தினம் இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை சாய்த்ததால்,  வெற்றி  எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலை ஏற்பட்டது.
இந்திய வெற்றிக்கு  135 ரன்​கள் தேவை என்ற நிலை​யில் நேற்று கடைசி நாள் ஆட்​டத்தை இந்​திய அணி தொடர்ந்து  ஆடியது. ரிஷப் பந்த் 12 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 9 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜோப்ரா ஆர்ச்​சர் பந்​தில் ஆப் ஸ்டெம்பு சிதற போல்​டா​னார். இதைத் தொடர்ந்து கே.எல்​.​ராகுல் 58 பந்​துகளில், 6 பவுண்​டரி​களு​டன் 39 ரன்​கள் எடுத்த நிலை​யில் பென் ஸ்டோக்ஸ் பந்​தில் எல்​பிடபிள்யூ முறை​யில் ஆட்​ட​மிழந்​தார்.

30 ரன்​கள் சேர்த்த இந்த ஜோடியை கிறிஸ் வோக்ஸ் பிரித்​தார். நித்​திஷ் குமார் ரெட்டி 53 பந்​துகளில், ஒரு பவுண்​டரி​யுடன் 13 ரன்​கள் சேர்த்த நிலை​யில் கிறிஸ் வோக்ஸ் பந்​தில் விக்​கெட் கீப்​பர் ஜேமி ஸ்மித்​திடம் பிடி​கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். மதிய உணவு இடைவேளை​யில் இந்​திய அணி 39.3 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 112 ரன்​கள் எடுத்​திருந்​தது. ஜடேஜா 17 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தார்.

மதிய உணவு இடைவேளைக்கு பின்​னர் இந்​திய அணி தொடர்ந்து விளை​யாடியது. கைவசம் 2 விக்​கெட்​கள் மட்​டுமே இருக்க வெற்​றிக்கு
மேலும் 81 ரன்​கள் தேவை என்ற நிலையில் ஜடேஜா,  பும்​ரா​வுடன் இணைந்து போராடி​னார். 9-வது விக்​கெட்​டுக்கு 35 ரன்​கள் சேர்க்​கப்​பட்ட நிலை​யில் இந்த ஜோடி பிரிந்​தது.

பும்ரா 54 பந்​துகளில், ஒரு பவுண்​டரி​யுடன் 5 ரன்​கள் எடுத்த நிலை​யில் பென் ஸ்டோக்ஸ் பந்தை மிட் ஆன் திசை​யில் தூக்கி அடித்​த​போது பதிலி வீரர் குக்​கிடம் கேட்ச்  கொடுத்தார். அப்​போது இந்​திய அணி​யின் வெற்​றிக்கு 46 ரன்​கள் தேவை​யாக இருந்​தது.

ஆனாலும் ஜடேஜா​வும், முகமது சிராஜும் பொறுமை​யாக விளை​யாடி ஆட்​டத்தை  வெற்றியை நோக்கி நகர்த்​திக்கொண்டிருந்தனர். முகமது சிராஜ் 30 பந்​துகளில் 4 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஷோயப் பஷிர் பந்தை தடுப்​பாட்​டம் மேற்​கொண்ட போது போல்​டா​னார். இதனால் 22 ரன்கள் வித்தியாசத்தில்  இங்கிலாந்து வெற்றி  பெற்றது.

பந்தை தடுத்த  சிராஜ் அந்த  பந்து எங்கே செல்கிறது என்பதை கூட கவனிக்காமல்  எதை பார்த்துக்கொண்டிருந்தாரோ  தெரியவந்து. ஸ்டம்ப் அருகே விழுந்த பந்து மெதுவாக நகர்ந்து ஸ்டம்பை தொட்டது. இதனால் சிராஜ் ஆட்டமிழந்தார். ஒட்டு மொத்த இந்திய அணியில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். நேற்றை தோல்விக்குஇந்த கவனக்குறைவே  காரணம்.

அதுவரை  ஜடேஜா பொறுமையாகவும், அதே நேரத்தில்  நம்பிக்கையுடனும் ஒவ்வொரு பந்தையும் எதிர்கொண்டார். அவரது ஆட்டம் இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. வெற்றியை இந்தியாவுக்கு தந்து விடுவார் என எதிர்பார்த்தனர்.  அவர் 181 பந்துகளை சந்தித்து 61 ரன்களுடன் களத்தில் நின்றார்.  அதில் ஒரு சிக்சர், 4 பவுண்டர்களும் அடங்கும்.

வழக்கமாக  சிராஜ்  இரண்டு, மூன்று  பந்துகளுக்கு மேல் களத்தில் நின்றமாட்டார். ஆனால் நேற்று அவர்  30 பந்துகளை சந்தித்தார். எனவே  அவர் சமாளிப்பார் என எதிர்பார்த்த நேரத்தில் கோட்டை விட்டு விட்டார்.  4 ரன்கள் மட்டுமே எடுத்தார்.  முன்னதாக பும்ரா 54 பந்துகளை சந்தித்து 5 ரன்கள் எடுத்திருந்தார்.  அவரும் கோட்டை விட்டு விட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து 2-1 என்ற  புள்ளிகணக்கில் முன்னணியில உள்ளது.இன்னும் 2 போட்டிகள் உள்ளன.  4வது போட்டி  வரும் 23ம் தேதி மான்செஸ்டரில் நடக்கிறது.

 

 

 

error: Content is protected !!