Skip to content

திருச்சி- எஸ்பிஜி கட்டுப்பாட்டில் வந்தது 4 ராணுவ ஹெலிகாப்டர்கள்

திருச்சி பன்னாட்டு விமான நிலையம் முழுவதும் (பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை) எஸ்பிஜி கட்டுப்பாட்டில் வந்தது. இன்று இரவு தூத்துக்குடியில் இருந்து பாரத பிரதமர் மோடி திருச்சி விமான நிலையம் வருகை தர உள்ளார். அங்கு நான்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சற்று நேரத்தில் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு புறப்பட்டு சோதனை ஓட்டம் நிகழ்த்தப்பட உள்ளது. விமான நிலையத்திற்கு வரக்கூடிய அனைத்து பயணிகளும் முழு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மோப்ப நாய்கள் ,வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் விமான நிலையம் முழுவதையும் சோதனை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!