Skip to content

ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் வேண்டும்- செல்வப்பெருந்தகை பேட்டி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:

போர் நிறுத்தத்தை தாங்கள் தான் செய்தோம் என்று அமெரிக்கா கூறுகிறது, அப்படியானால் இந்தியாவை யார் ஆளுகிறார்கள்.
இந்திய நாட்டின் இறையாண்மைக்கு யார் பொறுப்பு. இதற்கு  மோடி  நாடாளுமன்றத்தில் பதில் அளிக்கவில்லை.

நாங்கள்தான் போரை நிறுத்தினோம் நாங்கள் தான் பாகிஸ்தான் அதிபர் இடம் பேசினோம் என்று மோடி ஏன் கூறவில்லை
டிரம்ப் கூற்றுக்கு  ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை?

அமெரிக்கா அதிபருக்கும் இந்த போர் நிறுத்தத்திற்கும் சம்பந்தமில்லை என்று கூறுவதற்கு ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள்
ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக பதில் கூற வேண்டும்
டிரம்ப் கூறுவது பொய் என்று கூறுவதற்கு ஏன்தயக்கம்.

முதல்வர் நேர்மையாக அரசியல் செய்கிறார். அவருக்கு எந்த ஒரு குந்தகமும் காவல்துறை விளைவித்து விடக்கூடாது
ஆணவ படுகொலைகளுக்கு தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று நானும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்
காங்கிரஸ் ஆட்சியில் இந்த சட்டம் கொண்டு வருவதற்கு தயாரானது/ இடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது
இந்தியா முழுவதும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த அரசு மறுக்கிறது
எனவே விரைவில் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!