கல்லுக்குழி ரயில்வே மைதானம் அருகில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம்..
திருச்சி கல்லுக்குழி ரெயில்வே மைதானம் அருகில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து கிடப்பதாக நேற்று கண்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து கோ – அபிஷேகபுரம் கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி செம்பட்டு குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது38).திருமணமாகாதவர், சென்டரிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில் மது அதிக போதையில் இருந்த இவர் நேற்று வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.