திருச்சி முக்கொம்பு மேலணையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் வந்து குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தத்தைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் ராகித் அகமது என்பவர், காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளார். தகவலறிந்த தீயணைப்பு துறையினர்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் சற்று அதிகமாக சென்ற காரணத்தால் மாணவனின் உடலை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பின்னர் உடலை கண்டுபிடித்து மீட்டனர்.
திருச்சி அருகே முக்கொம்பு மேலணையில் அடித்து செல்லப்பட்ட மாணவன்..
- by Authour
