கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து சிபிஐ அதிகாரிகள் கரூர் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலுச்சாமிபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட நபர்களை மீட்கும் பணிக்காக வருகை புரிந்த தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களிடம் நேற்று 6 வது நாளாக 33 நபரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தவெக பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு காயமடைந்த 5 நபர்கள் நேற்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.
இன்று மூன்று நபர்கள் சிபிஐ அதிகாரிகள் தங்கி உள்ள பயணியர் மாளிகையில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.

