இலங்கை அருகே வங்கக்கடலில் டித்வா புயல் இன்று உருவாகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், மழை இருக்கும் எனவும் ரெட் அலர்ட்டு விடுக்கப்பட்டுள்ளது.5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர். நாளை மறுநாள் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் , விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்தது வானிலை மையம் தெரிவி்த்தது. இந்தநிலையில்
தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்ததால் கண்காணிப்பு அதிகாரிகள் மாவட்டங்களுக்கு விரைந்து செல்லவும், மீட்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

