மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அமைந்திருக்கும் தர்காவுக்கு மின்னஞ்சல் மூலம் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலை தொடர்ந்து, காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் மோப்ப நாய்களின் உதவியுடன் தர்கா பகுதியில் தீவிர சோதனை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

