கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல், விபத்தில் காயமடைந்த 2 குழந்தைகள் உள்ளிட்ட மொத்தம் 4 பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்து குறித்து முதல்வர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

