Skip to content

போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவிலிருந்து வந்த பயணி திருச்சியில் கைது

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்குப் பயணிகள் வந்தடைந்தனர். அவர்களை இமிகிரேசன் அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த பழனிவேலு (51) என்பவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதில், பழனிவேலு போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை இமிகிரேசன் அதிகாரிகள் திருச்சி ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பழனிவேலுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!