கரூர், தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு, வரும் ஜனவரி 28-ம் தேதி (புதன்கிழமை) கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்று அரசுத் தேர்வுகள் இருந்தால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் சனிக்கிழமை வேலை நாளாகச் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

