ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ந்தேதி உலகத் தாய்மொழி நாள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நாளை விடுமுறை நாள் என்பதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிட் ) திருச்சிராப்பள்ளி மண்டல அலுவலகத்தில் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி திருச்சி மண்டல பொது மேலாளர் டி. சதீஷ்குமார் முன்னிலையில் அனைத்து போக்குவரத்துக் கழக பணியாளர்கள் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி இன்று எடுத்துக் கொண்டனர். இவ் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் துணை மேலாளர்கள் இராமநாதன்( பணியாளர் மற்றும் சட்டம்,) சுரேஷ் குமார் (வணிகம்) , புகழேந்தி ராஜ் (தொழில்நுட்பம் )மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

