செல்லப்பிராணிகளின் உமிழ்நீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் காயங்களின் வழியாக மனிதர்களின் உடலுக்கு நுழைந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கையில் ஏற்பட்ட காயத்தை வளர்ப்பு நாய் நக்கியதால், Sepsis என்ற நோய் தொற்று ஏற்பட்டு மன்ஜீத் சங்கா என்ற பெண் கோமா நிலைக்கு சென்றுள்ளார். இதய துடிப்பு பலமுறை நின்ற நிலையில், உயிரை காப்பாற்ற வேறு வழியின்றி அவரின் இரு கைகளையும், முழங்காலுக்கு கீழ் இரு கால்களையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

