நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், அதிமுகவில் இணைந்தார். மேலும் அவருக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
சீமானின் நாதகவின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள், அ.தி.மு.க.வில் இணைந்து உள்ளார். அதிமுகவில் இணைந்த அவருக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி அந்தக் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அவருடன், தி.மு.க, அ.தி.மு.க., பா.ஜ.க., த.வெ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், தற்போது அவர் அ.தி.மு.க.வில் இணைந்து உள்ளார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.கவில் காளியம்மாள் இணைந்தார். அப்படி அதிமுகவில் இணைந்த காளியம்மாளுக்கு, 2026 சட்டமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் தெரிய வந்துள்ளது.

