Skip to content

அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து: தேர்தல் நடத்தை விதிகளால் ஆட்சியர் நடவடிக்கை

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் இன்று (15.03.2026) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் தங்களின் அவசரக் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்புறம் வைக்கப்பட்டுள்ள மனுப் பெட்டியில் போட்டுச் செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!