Skip to content

தவெகவில் இருந்து விலகிய ராஞ்சனா திமுகவில் இணைந்தார்

பாஜகவில் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநில செயலாளரும், நடிகையுமான ராஞ்சனா நாச்சியார். இவர் கடந்த 2023ம் ஆண்டு சென்னை போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி சென்ற மாநகர பேருந்து படிக்கெட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை அடித்தும், ஒருமையில் திட்டியும் கையை பிடித்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டார். அதுமட்டுமல்லாமல் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதுதொடர்பாக வீடியோ காட்சிகள் வைரலானதை அடுத்து நடிகையும் பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து கடந்த ஜனவரி மாதம் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.

கடந்த சில நாள்களாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் மீது விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்த ரஞ்சனா, அக்கட்சியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்த ரஞ்சன், திமுகவில் இணைந்துகொண்டார்.

error: Content is protected !!