கர்நாடகா, யாதகிரியில் தனியார் பேருந்து மீது கார் மோதி தீப்பிடித்ததில் 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பெங்களூரில் இருந்து கலபுர்கி நோக்கிச் சென்ற தனியார் ஏசி பேருந்தும், யாத்கிரியில் இருந்து ராய்ச்சூர் லிங்கசுகூர் நோக்கிச் சென்ற காரும் பயங்கரமாக மோதியது. பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தீப்பிடித்து எரிந்ததில் பேருந்தில் பயணம் செய்த பலர் காயம் அடைந்தனர்.
