90 வயது மூதாட்டி ஒருவர் தொடர்ந்த வழக்கை 2046-ம் ஆண்டுக்கு மும்பை HC ஒத்திவைத்தது. குடியிருப்போர் நல சங்கத்தினர் தன்னை கடனாளி என குறிப்பிட்டதற்காக, அந்த மூதாட்டி ரூ.20 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் சமரச முயற்சிகள் தோல்வியடைந்தன. வயதானவர்களின் ஈகோவால் கோர்ட் நேரம் வீணாவதாக வேதனை தெரிவித்த நீதிபதி, அத்துடன் அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்த வழக்கு விசாரிக்கப்படாது என்று உத்தரவிட்டார்.
