திருச்சி காந்தி மார்க்கெட் ஜெயில் பேட்டை மாரியம்மன் கோவில் பின்புறம் தமிழக அரசு தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக காந்தி மார்க்கெட் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போதை மாத்திரைகள் விற்றுக் கொண்டிருந்த அரியமங்கலம் மேல அம்பிகாபுரத்தை சேர்ந்த சிவ பிரசாந்த் (25) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 6 போதை மாத்திரைகள் 2 ஊசிகள், 1 வாட்டர் பாட்டில் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
