திருச்சி உறையூர் பகுதிகளில் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்து. அதன் பேரில் போலீசார் பகுதிக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உறையூர் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்த சாந்தி (47,) அமுதவல்லி (64)மற்றும் முருகேசன் (64 )ஆகியோர் வீட்டின் அருகே மது பாட்டில்களை பதிக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் 109 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
