மயிலாடுதுறையில் விஜய்க்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாரை திமுகவினர் தாக்கியுள்ளனர். விஜய்யை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காத கவர்னரை கண்டித்து காங்., தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த திமுக நிர்வாகிகள், காங்., தொண்டர்களை தாக்கி, கட்சிக் கொடிகளையும் பறித்துச் சென்றனர். இதை பார்த்தால், நேற்று வரை பங்காளி, இன்று முதல் பகையாளி என்ற சொல்லாடல் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
