திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் ஆலம் தெரு பகுதியில் இளைஞர்களின் உடல் நலன் பாதிக்கும் போதை மாத்திரைகள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே பாலக்கரை சப் இன்ஸ்பெக்டர் பாத்திமா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு சந்தேகத்துக்கு இடம் அளிக்க வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்தனர் பின்னர் அவர்களது பையை வாங்கி சோதனை இட்டபோது அதில் ரூபாய் 8000 மதிப்பிலான 100 போதை மாத்திரைகள், ஊசிகள் இருப்பது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து பாலக்கரை காஜா பேட்டை பசுமடம் பகுதியைச் சேர்ந்த முகமது ஆசிக் (வயது 24) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து போதை மாத்திரைகளை கைப்பற்றினர் கைதான முகமது ஆசிக் கை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி ஜெயிலில் அடைத்தனர் சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.
