திருச்சி, உறையூர் – புத்தூர் சாலையில் லாரி ஒன்று முன்னே சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பைக் லாரியின் அடியில் சிக்கியதுடன், பைக்கில் சென்ற இளைஞர் தலையில் படுங்காயம் ஏற்பட்டுள்ளது. ரத்தம் வழிந்த நிலையில் அவரை பொதுமக்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
