Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தென்காசியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உண்ணாவிரதம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தென்காசி மாவட்டத்தில் உள்ள செண்பகவல்லி அனை உடைப்பை சரி செய்ய வேண்டும் மற்றும் உள்ளாறு அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

பயிர்களை சேதப்படுத்தக்கூடிய வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டு பன்றியை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வைகோ உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். காலை 8 மணிக்கு இந்த உண்ணாவிரத போராட்டத்தை வைகோ தொடங்கினர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வாசுதேவநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட்ட பல்வேறு நபர்கள் வைகோ தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!