குறுவை சாகுபடி இல்லாததால் வேலை இன்றி பட்டினியால் தவிக்கும் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு தமிழக அரசு மேட்டூர் அணை திறக்கும் வரை மாதம் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாய கூலி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்:
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் 200 க்கும் மேற்பட்டோர்
குறுவை சாகுபடிக்கு ஜூன் 12 ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாத நிலையில்
தஞ்சை டெல்டா மாவட்ட விவசாய கூலித் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் பட்டினியால் தவிப்பதால்
தமிழக அரசு பயிர் சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கும் வரை மாதம் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும்
100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக உயர்த்த வேண்டும்
தினக்கூலியை 700 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிடப்பட்டது.
