திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், கோட்டப்பாளையம் ஊராட்சியில், தமிழ்நாடு கிராம ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 49.57 இலட்சம் மதிப்பீட்டில் புடலாத்தி கோட்டப்பாளையம் சாலை முதல் பாலகிருஷ்ணம்பட்டி வரை அமைக்கப்பட்டிருக்கும் தார்சாலை பணிகளை மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில், உப்பிலியபுரம் ஒன்றியக் குழுத்தலைவர்
ஹேமலதா முத்துச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், மணிவேல், உதவிப் பொறியாளர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும் பாலத்தின் கட்டுமான பணிகள், கழிவுநீர் அமைக்கும் பணியினையும் ஆய்வு செய்தார்.